10 மனச்சோர்வு கவிதைகள் | Depressed Quotes in Tamil

மன அழுத்தம் என்பது மன நோயாகும் நம் கவிதைகளை (Depressed Quotes in Tamil) கண்டு மனதிற்கு மருந்தளியுங்கள்.

1.
தனிமை வெறுமை என்று புலம்புவதை விட்டுத்தள்ளினாலே பாதி மன அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது…

2.
அழுவதால் கண்கள் சுத்தமாகுமாம் கண் பார்வை தெளிவாகுமாம் மன அழுத்தம் குறையுமாம் நன்றி சொல்லுங்கள்…
உங்கள் மனதை காயப்படுத்தியவருக்கு.

3.
உடல்சோர்வு ஒரு பலவீனமே அல்ல. மனச்சோர்வு தான் உண்மையில் பலவீனமாகும்.

4.
பலரின் உறக்கமில்லா இரவுகளுக்கு சிலரின் இரக்கமில்லா துரோகமே காரணம்.

5.
வழிகளைக் தேடித்தான் செல்கிறோம்…! போகும் இடமெல்லாம் காத்திருப்பது என்னவோ வலிகள் மட்டுமே…!

Read also அமைதி கவிதை வரிகள்

6.
நிம்மதி இருந்தால் நிமிடம் கூட வீணாகாது நிம்மதி இல்லாவிட்டால் நிமிடம் என்ன வாழ்நாள் முழுவதும் வீணாகி விடும்…

7.
நிஜத்தின் வலியில் கற்பனை எல்லாம் இறந்து போனது…

8.
சொல்ல முடியாத சோகங்கள் தான் சில சமயம் கோபமாய் வெளிப்படுகிறது…

9.
கவலைக்கு நாம் இடம் கொடுத்தால்..அது நம்மை கவலைக்கிடமாக்கி விடும்…!

10.
மன நோய் என்பது மனதால் வருவதல்ல சில மனிதர்களால் வருகிறது…

அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி, வணக்கம்.

Related Post | தொடர்புடைய பதிவுகள்